Tuesday 30 August 2011

அன்னநடை

மாலையின் மஞ்சள் வெயில்
மேனி தொட்டதனாலா
உன் முகம், மலர்ந்தது
சிவந்த ரோஜாவாக?

முட்களை கொண்ட உடை
களைந்து, உன் மலர் மலர்.
தேனிகளுக்கு அனுமதி மறுத்துவிடு.

கவனித்து உன் கனி கனி.
கிளிகள் களவும் கற்றவை.

வேரில் பழுத்த பலா
கீறிக் கிடந்த வணப்பு.

வாழை விரிந்த தண்டு நடை
வழியெல்லாம் வண்ணமாய்.

மொத்த வடிவம் மலர்க்கொத்து,
குலைகுலையாய் கவிழ்ந்த கனி.

நடந்து நின்றால் நாடகம்,
நிலை கொள்ள மனம் தவிப்பு.

No comments:

Post a Comment