Monday 29 August 2011

ஈசனின் மகள்

வெடித்துச் சிதறி விழுந்த
விதை, சிறு தளிராய் துளிர்த்தது.

கதிரவனின் கண்படாது மறைக்க
மேகம் பரப்பினான்.
கார்மேகத்தினின்று சில நீர்த்துளிகளைத்
தூவினான்.

வளர்ந்து சிரிப்புடன் மகிழ்ந்து
செழித்துநின்றது.
ஒரு நாள் மணம் பரப்பிநின்றது
மலர் மலர்ந்து.

அழகு மலராய், இனிய மணத்தை
வார்த்த ஈசனுக்கு நன்றி.

No comments:

Post a Comment