Tuesday 30 August 2011

தன்கொலை

கைகூடாத காதல்
கனி எட்டாததாய் இருந்திருக்கலாம்.
ஆனாலும், நானும் மனிதம்தானே.

வேலையும் கிடைக்கவில்லை.
வெட்டி எஞ்சினியர் என்றும் கேலி.
பெற்றோரும் மற்றோரும் மதிப்பதாயில்லை.

ஏளனசிரிப்பை ஏற்கவில்லை மனம்.
ஏறிட ஏணி கிடைக்கவில்லை.

கிடைத்ததெல்லாம்,

அரசுவின் ஒரு ரூபாய் அரிசி,
நாய்க்கு மட்டுமே பயன்படும் அது.
அதன்பதில், வேலை உறுதி செய்திருக்கலாம்.

நானும் பிழைத்திருந்திருப்பேன்.

சரி, தூக்குக்கயிறின் கடைசி இறுக்கம்.
தசைக்கூண்டினுள் உயிரின் தத்தளிப்பு.

அடுத்தமுறை வாழ நினைப்போம்.

No comments:

Post a Comment