Wednesday 31 August 2011

மேகம்

திருடி உறிஞ்சிய நீரை
சுமக்க தடுமாறி கொட்டிய மழை.
சேகரித்த மதுவைஎல்லாம்
தேனாய் மாற்றுமாம் தேனி,
அதுபோல் நீரெல்லாம் தேன்.
கலவுக்குதவிய கதிரவனையே
மறைத்துநின்றாய். மறைந்துவிட்டாய்
கர்ப்பம் கலைந்து,
வானம் பற்றவைத்த,
மறையும் சூரியனை காட்டி.
எங்கு சென்று மறைந்தாய்
களவை மறைக்க.

No comments:

Post a Comment