Wednesday 31 August 2011

கனிந்தது

அசைந்து அசைந்து ஆடிவந்த தென்றல்,
உரசிய உன் ஸ்பரிசத்தினால்
துளிர்த்த ரகசிய சந்தோஷத்தில்,
தவித்து தனித்து நிலை மயங்கி
நின்ற என்னை
ஏளனமாய்ச் சிரித்துச் சென்றது.
விட்டு விலகிய சூரிய ஒளி
பூமி மறைத்த பாவத்தினால்,
மேகத்தினை இடித்து உடைத்த
வான் விரிசலில்
ஒழுகி வழிந்த மழை,
உன் வளைவுகளில் வாழ்ந்து முடித்து,
நினைவு தவறி என் கால்களையும்
முத்தமிட்டுச் சென்றது.
கட்டிவைத்த வார்த்தைகளை
கொட்டிவிட முடியாமல் தவித்துவிட்டதை
அவிழ்த்து விட்ட காரணத்தால்,
அவைகளும் வாழட்டும் என்னோடு.

No comments:

Post a Comment