Monday 29 August 2011

நினைவலைகள்

அலைந்து ஆடிக்கிடக்கும் நீலக்கடலின்
ஆழ்ந்த,
வெள்ளி உருக்கி அடுக்கினாற்போல்
பாய்ந்து,
ஓயாமல் மோதி கரைதாண்டத்
துடித்து மடியும்
அலைகள்தனை,

உறுதிப்படுத்தி ஒத்துநிற்கும்,
எந்தன் மனம் நிறைக்கும்,
உந்தன் நினைவலைகள்.
மறுத்து நின்றும்
வெறுத்து சென்றும்
உள்மனம் தாண்டி
புறம்செல்ல வழியேயில்லை.

சுற்றிச் சுற்றி வந்து
மலர்ந்து, மணந்து களிக்கும்
ஆழ்மனம் தன்னிலேயே
பசுமையாக.

No comments:

Post a Comment