Monday 29 August 2011

தனிமையே இனிமை

மரக்கிளைகளினூடே குடியிருந்த குயில்
விட்டுப் பறந்தபின்னும் இனிமை தங்கியே
கிடக்கின்றது.

மிச்சமாகிப்போன இரவுகளும் தனிமையில்
இனிமைகளையே விதைத்திருந்தன.

ஒவ்வொருமுறையும் முன் சென்று பின் வந்த
அக்காளின் முகமும் சிறுகச் சிறுக
மறந்துகொண்டிருக்கின்றன.

தனிமையே இனிமை என்பதினை உரைத்து.

No comments:

Post a Comment