Tuesday 30 August 2011

ரசிகன்

கடைவீதியில் கடந்து கண்ட
ஒரு மாலைப்பொழுது.

ஆர்ப்பாட்டமில்லா அழகு,
அவள்.

அழகு,
மலர்ந்த தாமரை முகம்.

சிந்தையனைத்தும் சிதறடிக்கும்
சிரிப்பு.

சிலை கண்டு,
சினம்கூட சிதைந்து நிலை மறக்கும்
சிக்கண இடை.

ஒடியும் இடை நடிப்பு,
நடை.

சிலிர்க்கும் ஓய்யாரக்கொண்டை,
காற்றுக்கு அதிரும் தென்னங்குலை.

அலுங்கிக்குழுங்கும் எலும்பிலா,
பஞ்சமில்லா ஊஞ்சல் திசு,
தசை.

சூழ் அமையப்பெற்ற
அடிவயிறு.

சித்து வித்தைகாட்டி
சினைப்படுத்திய
சிற்றரசன் சின்ன நடையில்
ஒய்யாரமாய் அருகினில்.

அட,
கடவுள் ஒரு ரசிகன்தான்.

No comments:

Post a Comment