Wednesday 31 August 2011

மலர்ந்த காதல்

வீழ்ந்த துளி
இணைய அனுமதியில்லை
மீண்டும் மேகத்துடன்.
சிந்திய வார்த்தைகள்
அள்ளமுடிவதில்லை
கொட்டியபின்.
குடித்த கள்
நினைவு பெறுவதில்லை
முடித்தபின்.
கண்ணே,
காதலில் மட்டும்
எதற்கும் முடிவில்லை
விடிவு உண்டு.
கண்டுகொள்.
கடந்த தவறுகளை எல்லாம்
கழுவிஎடுத்து கடைந்து
குழம்பிக்கொண்டிருக்காமல்,
முடிந்தது முடிந்ததாய் முடிந்தபின்,
எல்லாம் மறந்துவிட்டு,
செத்தவனுக்கு ஜாதகம் காணவிழையாமல்,
மத்தவனையும் மனத்தால் எண்ணாமல்
முழுவதுமாய் கலந்துவிடு
காதலுக்கு மரியாதையாய்

No comments:

Post a Comment