Monday 29 August 2011

நீயில்லாத நான்

சிறு மாற்றுப் பாதையாயினும்
ஒரு சுதந்திரக் காற்றையே
சுவாசிக்கச் செய்திருக்கிறாய்.

உன் பற்றிய நினைவுகளை
எல்லாம் துறக்க, இசைக்கும்
குயில்க் கூட்டங்களே அதிகம்.

அசைவு ஆட்டங்களையும்
அஞ்சாமல் எடுத்தெரிய, இன்ப
மயில்களின் ஆனந்த நடனங்கள்.

வானத்துக்குக் கூட வகையறியா
குதூகலம்தான் பின் என்ன
எட்டுத் திசைகளிலும் வானவில்கள்.

என் வழி தனி வழியாய்
உன் மனம் நோகாமல், பாவாமல்
ஓர் துன்பமில்லா இதய வழிபாடு.

சுற்றிலும் புல்வெளிதான்
பாய்ந்தோடும் நதிவழிதான்
நீயும் உவகையோடு வாழவேதான்.

No comments:

Post a Comment