Wednesday 31 August 2011

அடங்கா அன்பு

இனி பருக்க முடியாது
என முடிவுகட்டிய
வேரிலே பழுத்து விழுந்த
பலாவினைப்போல,
கடந்த ஜென்ம காதல் கனிந்து,
கரைகடந்த சுவையுடன்
உறைந்து மறைந்ததினால்,
இந்த ஜென்ம சந்திப்பு
வரம் பெற்று, எனை
உன் கத்திப்பார்வை வீசி,
கக்கக்கக்க அமுதூட்டிக்
கொன்றுகொண்டிருக்கிறாயே?

இன்னும் எத்தனை ஜென்மங்கள்
தேவை உனக்கு,
என்னை உன் அடங்கமுடியாக்
காதலிலிருந்து விடுவிப்பதற்கு.

எனக்கு ஒன்றும் எண்ணமில்லை.
ஆனாலும் நம் கலப்பின் முடிவு
இறைநோக்கி மட்டுமே.

No comments:

Post a Comment