Monday 29 August 2011

கலைக்கண்ணில் பனை

கரும் கூந்தல் கலைத்துக் கட்டினால்
பனம் கீத்துக் கிளைகள்தான்.

கூடுகட்டிக் களித்திருக்கும் ஆந்தைகள்
கூர்மையான கருவிழிகள்.

காய்ந்து பாடியாடும் பாலை வளைவுகள்
கொஞ்சிநிற்க்கும் கன்னக் கிண்ணங்கள்.

குலைகள் ஊஞ்சலில் நுழைந்து தூங்கும்,
விளைந்து முலைத்த இள நுங்குகள்.

கீறி வடியும் பாலைகள் பால் சுரக்கும்,
மழலை பசி தீர்க்கும் கள்.

மொத்தமும் நீகொண்ட வலிய தொடை
நெடிய பருத்த கருந்தண்டு.

No comments:

Post a Comment