Monday 29 August 2011

உயிருள்ள ஓர் காலை

இதுவும் ஓர் இனிய காலைப் பொழுதுதான்.

தோட்டத்தின் பச்சைப்பசும் உயிர்களெல்லாம்
நிறைவுடன் தலையாட்டிநின்றன நீர்பட்டவுடன்.

ஒரு கொடிக்கு மட்டும் வெட்கமும், பின்
முளைத்த எக்காளமுமாய் முகம்.

ஒரு மஞ்சள்நிற மலர் காட்டிப் பூத்து,
கர்ப்பமாகப் போகின்றதாம் இன்பக்களிப்பு.

வண்ணக் கலவைகளால் பூசப்பட்ட சிறகினில்
வட்டமடித்துக்கொண்டாடும் வண்ணத்துப்பூச்சிகள்.

சர்ப்பங்கள் மிக அழகானவை இறைப்படைப்பில்,
ஆனாலும் முகம்காட்டமறுத்தே வாழ்கின்றன.

கண்டதும் கொடியினுள் புகுந்து
மறைந்து விளையாடி மகிழ்கின்றன.

துப்பாக்கிகள், அவற்றின் உயிர் பறிக்கின்றன.
உயிர்களையும் உருவாக்கவும் செய்கின்றன.

No comments:

Post a Comment