Wednesday 31 August 2011

கர்மவீரர்

தமிழர் மீது தணியா
அன்பு.
கட்டிவைத்த அத்தனை
அணைகள்,
கழனி செழிக்க
நீர்நிலைகள்,
வளர்ந்தெழ வழியமைத்த
ஆலைகள்,
கற்றுத்தெளிய
கல்விச்சாலைகள்,
பசி மறந்து படிப்புணர்த்திய
உணவுத்திட்டங்கள்,
மொத்த நாட்டுக்கும்
மின்சாரம்,
எல்லா துறையிலும் வளர்ச்சிதான்
பொற்காலம்தான் உம் ஆட்சிக்காலம்.
கைவண்டிக்காரன் மகன்
கலெக்டர்.
நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
நீங்கள் போட்ட ரோட்டில்
கோடுபோடக்கூட
திறனன்றி திணறி ஓடுகின்றோம்
உதவ நாதியின்றி.
உரம் இட்டுச்சென்றீர்,
எப்படி வளர்கிறோம் என்றுகூட
உணரமுடிய விதைகளுககு.
உடுண்டோடிவிட்டன
காலவருடம் 45
மழைநீர், தென்றல்காற்று, தந்த இறைவன்
கொடுத்தது உங்களை, தானமாய்.
மணம் பதைத்துத்
திகைத்து நிற்கின்றோம்,
நன்மை செய்வது என்பதைக்கூட
மறக்கடித்த இந்த நிகழரசியல்
கலை கண்டு.
தமிழனுக்கு எப்படியும் வெற்றி உண்டு
உங்களால்.

No comments:

Post a Comment