Monday 29 August 2011

இனிமையான இந்தத் தனிமை

ஆழ்ந்த அமைதியின் சொரூபக் கூடு
அதில் தனிமையின் மலர்ந்த இனிமை.

சில்லென்ற தென்றலின் இரவுத்தாலாட்டு
சிறிதாகக் கலந்த உன் மொழியுரசல்கள்.

சிதறிய நிலையில் மேகக் கூட்டங்கள்
சிற்றிடையினில் சின்ன நிலா.

மின்னல்களை எண்திசையும் எரியும்
மின்மினுக்கும் விண்மீன் தொகுப்பு.

தன் வெப்பக் கீற்றுக்களை வீசி எரியும்
அனல் அடிக்கும் அன்பு ஆதவன்.

தனிமையே இங்கு இல்லை, உறவுக்கு
ஆயிரம் சொந்தம் திரும்புமிடமெல்லாம்.

உன் இருப்பு இருக்கவில்லை என்பதினை
என் நெருப்பு உரைத்துவிட்டிருக்கிறது.

உடன் கலந்திருப்பது மட்டும் ஒரே உயிர்
அதன் நினைவுகளில் நித்தமும் நிரந்தரம்.

நிலையில்லா ஜென்மத்தின் ஈடு, மறு
ஜென்மம் மறந்திடும் மந்திரக் கூடு.

No comments:

Post a Comment