Wednesday 31 August 2011

விலைபோன அன்பு

அன்னை தெரசா.
அப்படி படைத்ததென்ன சாதனை,
இவ்வளவு புகழ்மாலை அணியப்பெற.
கிழித்துவிடவில்லை ஒன்றும்.
என்ன, கல்கத்தாவின் தெருஓர
அனாதைக்குழந்தைகளின் அழுக்கை அகற்றி,
பின்னர் கொடுத்தது என்னவோ
சிலுவையைத்தான்.
சிலுவையை பரப்பியமைக்கு,
பணம் கொடுத்த கிருத்துவம் வணங்கட்டும்.
வரி விதிக்கப்பட்ட அன்புகளுக்கு
நாம் ஒன்றும் சிலை வைக்கவேண்டாம்.
அரசு கவனிக்க மறந்து,
விலையாகிப்போனஅன்பு,
விதியன்றி அர்ப்பணிப்பாகா.
அன்பின் விலை மதம்,
மதம்கொண்ட தெரசா.

No comments:

Post a Comment