Tuesday 30 August 2011

நண்பி

உருவித்தொங்கிக் கிடந்த
உயிரை உதட்டு பசைகொண்டு
ஒட்டவைத்தவள்.

கரைகடந்த காமப்பசியினை
கல்லெறிந்து கடும்பள்ளத்துள்
கடாசியவள்.

சோகத்தில் சுரம் பாடிய
சுந்தரனுக்கு சுக ராகம் சுரக்க
உதவினவள்.

தேக சௌகரியம் தேடி
நின்றவனுக்கு தேனமுதை
திசைதிருப்பியவள்.

இன்பக்காற்றாய் இனிமை
தந்தவள்,
கண்ணிமைப்பொழுதில் காணாமல்
சென்றவள்.

No comments:

Post a Comment